| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 601 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 5 | பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே | பாடும், Paadum - பாடுகின்ற குயில்காள்!, Kuyilkaal - குயில்களே! ஈடு, Eedu - (கர்ண கடோரமான) இக் கூசல் என்ன பாடல்?, Enna paadal? - என்ன பாட்டு நல் வேங்கடம் நாடர், Nal Vengadam Naadar - விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான் நமக்கு, Namakku - என் விஷயத்திலே ஒரு வாழ்வு தந்தால், Oru vaazhvu thandhaal - ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது) வந்து பாடுமின், Vandhu paadumin - (நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள் ஆடும், Aadum - (ஆநந்தத்தாலே) ஆடுகின்ற கருளன், Karulan - பெரிய திருவடியை கொடி உடையார், Kodi udaiyaar - த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான் அருள் செய்து, Arul seidhu - க்ருபை பண்ணி வந்து கூடுவர் ஆயிடில், Vandhu kooduvar aayidil - (இங்கே) வந்து சேர்வனாகில் கூவி, Koovi - (அப்போது உங்களை) வரவழைத்து நும் பாட்டுக்கள், Num paatukal - உங்களது பாட்டுக்களை கேட்டுமே, Ketume - கேட்போம் |