| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 603 | நாச்சியார் திருமொழி || 10 - கார்க்கோடல் (தலைவி பிரிந்த நிலையில் பிரிவாற்றாது வருந்திக் கூறுதல்) 7 | நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே | நடம் ஆடி, Nadam aadi - கூத்தாடிக் கொண்டு தோகை விரிக்கின்ற, Thokai virikkinra - தோகைகளை விரிக்கிற மா மயில்காள், Maa Mayilkaal - சிறந்த மயில்களே! உம்மை, Ummai - உங்களுடைய நடம் ஆட்டம் காண, Nadam aatam kaana - கூத்தைப் பார்ப்பதற்கு பாவியேன் நான், Paaviyen naan - பாவியேன நான் ஓர் முதல் இலேன், Or mudhal ilen - கண்ணை யுடையேனல்லேன் குடம் ஆடு கூத்தன், Kudam aadu koothan - குடக்கூத்தாடினவனான கோவிந்தன், Govindhan - கோபாலக்ருஷ்ணன் கோமிறை செய்து, Komirai seidhu - கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி எம்மை, Emmai - என்னை உடை மாடு கொண்டான், Udai maadu kondan - ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான் இனி, Ini - இப்படி யிருக்க ஒன்று, Ondru - (என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம் உங்களுக்கு, Ungalukku - உங்களுக்கு போதுமே, Podhume - தகுமோ? |