Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 607 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
607நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 1
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே
ஏந்து இழையீர்!, Endhu izhaeeyir - ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!
யாம் உகக்கும் என் கையில் சங்கமும், Yaam ugakkum en kaiyil sangamum - நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்
தாம் உகக்கும் தம் கையில் சங்கம் போலாவோ, Thaam ugakkum tham kaiyil sangam polaavo - தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?
தீ முகத்து, Thee mukathu - க்ரூரமான முகங்களை யுடைய
நாக அணை மேல், Naaga anai mel - திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே
சேரும், Serum - பள்ளி கொண்டருளா நின்ற
திரு அரங்கர், Thiru arangar - ஸ்ரீரங்கநாதன்
முகத்தை, Mukathai - (என்னுடைய) முகத்தை
நோக்கார், Nokaar - நோக்குகின்றாரில்லை
ஆ!, Aa! - ஐயோ!
அம்மனே! அம்மனே!, Ammane! Ammane! - அந்தோ! அந்தோ!