Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 608 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
608நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 2
எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
எழில் உடைய, Ezhil udaiya - அழகை யுடைய
அம்மனைமீர், Ammanaimir - தாய்மார்களே!
அரங்கத்து, Arangathu - திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற
என் இன் அமுதர், En in Amudhar - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர், Kuzhal azhagar - அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய்
வாய் அழகர், Vaay Azhagar - அழகிய திரு வதரத்தை யுடையவராய்
கண் அழகர், Kan Azhagar - அழகிய திருக் கண்களை யுடையவராய்
கொப்பூழில் எழு கமலம் பூ அழகர், Koppuzhil ezhu kamalam poo Azhagar - திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய்
எம்மானார், Emmaanaar - எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர்
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
கழல் வளையை, kazhal valaiyai - “கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை
தாமும், thaamum - அவர் தாம்
கழல் வளையை ஆக்கினர், kazhal valaiyai aakinar - “கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார்