| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 609 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3 | பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே | பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள ஓதம், Odham - கடலாலே சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும் விண் உலகும், Vin ulagum - பரம பதமும் ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய் செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய் திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர் என், En - என்னுடைய கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி) |