Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 609 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
609நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 3
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே
பொங்கு, Pongu - அலை யெறியா நின்றுள்ள
ஓதம், Odham - கடலாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
புவனியும், Buvaniyum - இப் பூ மண்டலமும்
விண் உலகும், Vin ulagum - பரம பதமும்
ஆதும் சோராமே, Aathum sorame - சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற, Aalkinra - நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான், Em perumaan - ஸ்வாமியாய்
செங்கோல் உடைய, Sengol udaiya - செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார், Thiru arangam selvanaar - கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என், En - என்னுடைய
கோல் வளையால், Kol valaiyaal - கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே, Idar theervar aagaadhe - தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ (அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி)