Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 610 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
610நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 4
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே
மச்சு, Machu - மேல் தளங்களாலே
அணி, Ani - அலங்கரிக்கப் பட்ட
மாடம், Maadam - மாடங்களையும்
மதிள், Madhil - மதிள்களையுமுடைய
அரங்கர், Arangar - திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய்
வாமனனார், Vaamananar - (முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய்
பச்சைப் பசுந்தேவர், Pachai Pachundhevar - பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான்
தாம், Thaam - தாம்
பண்டு, Pandu - முன்பு (மஹாபலி யிடத்தில்)
நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி, Neer yetra Pichchai Kurai aagi - உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக)
என்னுடைய, Ennudaiya - என்னுடைய
பெய் வளை மேல், Pei Valai Mel - (கையில்) இடப்பட்டுள்ள வளை மேல்
இச்சை உடையர் ஏல், Ichai Udaiyar el - விருப்பமுடையவராகில்
இத் தெருவே, Ith Theruve - இத் தெரு வழியாக
போதாரே, Podhaare - எழுந்தருள மாட்டாரோ?