| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 611 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 5 | பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான் நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான் இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே | பொல்லா குறள் உரு ஆய், Polla Kural Uru Aay - விலக்ஷண வாமந ருபியாய் பொன் கையில், Pon Kaiyil - அழகிய கையாலே நீர் ஏற்று, Neer Yetru - பிக்ஷை பெற்று எல்லா உலகும், Ella Ulakum - ஸகல லோகங்களையும் அளந்து கொண்ட, Alanthu Konda - தன் வசப் படுத்திக் கொண்ட எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியாய் நல்லார்கள் வாழும், Nallaarkal Vaazhum - நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற நளிர் அரங்கம், Nalir Arangam - ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில் நாக அணையான், Naaga Anaiyaan - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள் இல்லாதோம், Illaadhom - அகிஞ்சநையான என்னுடைய கைப் பொருளும், Kai Porulum - கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்) எய்துவான் ஒத்து உளன், Eidhuvaan Othu Ulan - கொள்ளை கொள்வான் போலிரா நின்றான் |