Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 611 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
611நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 5
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே
பொல்லா குறள் உரு ஆய், Polla Kural Uru Aay - விலக்ஷண வாமந ருபியாய்
பொன் கையில், Pon Kaiyil - அழகிய கையாலே
நீர் ஏற்று, Neer Yetru - பிக்ஷை பெற்று
எல்லா உலகும், Ella Ulakum - ஸகல லோகங்களையும்
அளந்து கொண்ட, Alanthu Konda - தன் வசப் படுத்திக் கொண்ட
எம் பெருமான், Em Perumaan - ஸ்வாமியாய்
நல்லார்கள் வாழும், Nallaarkal Vaazhum - நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற
நளிர் அரங்கம், Nalir Arangam - ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில்
நாக அணையான், Naaga Anaiyaan - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள்
இல்லாதோம், Illaadhom - அகிஞ்சநையான என்னுடைய
கைப் பொருளும், Kai Porulum - கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)
எய்துவான் ஒத்து உளன், Eidhuvaan Othu Ulan - கொள்ளை கொள்வான் போலிரா நின்றான்