Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 612 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
612நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 6
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே
காவிரி நீர், Kaveri Neer - காவேரியின் தீர்த்தமானது
செய் புரள ஓடும், Sey Purala oodum - பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த
திரு அரங்கம், Thiru Arangam - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற
செல்வனார், Selvanaar - ஸ்ரீமானாயும்
எப் பொருட்கும் நின்று, Epporutkum Nindru - எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
ஆர்க்கும் எய்தாது, Aarkum Eydhaadhu - ஒருவர்க்கும் கைப் படாமல்
நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார், Naal Maraiyin Sol Porul Aay Nindraar - நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள்
முன்னமே, Munname - ஏற்கனவே
கைப் பொருள்கள், Kai Porulkal - கையிலுள்ள பொருள்களை யெல்லாம்
கைக் கொண்டார், Kaikondar - கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)
என் மெய் பொருளும், En Mei Porulum - எனது சரீரமாகிற வஸ்துவையும்
கொண்டார், Kondaar - கொள்ளை கொண்டார்