| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 612 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 6 | கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர் செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார் எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே | காவிரி நீர், Kaveri Neer - காவேரியின் தீர்த்தமானது செய் புரள ஓடும், Sey Purala oodum - பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த திரு அரங்கம், Thiru Arangam - திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற செல்வனார், Selvanaar - ஸ்ரீமானாயும் எப் பொருட்கும் நின்று, Epporutkum Nindru - எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று ஆர்க்கும் எய்தாது, Aarkum Eydhaadhu - ஒருவர்க்கும் கைப் படாமல் நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார், Naal Maraiyin Sol Porul Aay Nindraar - நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள் முன்னமே, Munname - ஏற்கனவே கைப் பொருள்கள், Kai Porulkal - கையிலுள்ள பொருள்களை யெல்லாம் கைக் கொண்டார், Kaikondar - கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது) என் மெய் பொருளும், En Mei Porulum - எனது சரீரமாகிற வஸ்துவையும் கொண்டார், Kondaar - கொள்ளை கொண்டார் |