| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 613 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7 | உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே | திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது) பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும் உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி) ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி) தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம் எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது) தம்முடைய, Thammudaiya - தம்முடைய நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார் |