Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 613 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
613நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 7
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே
திண் ஆர் மதிள் சூழ, Thin Ar Mathil Soozha - (மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம், Thiru Arangam - கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார், Selvanaar - ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை, Pen Aakkai - சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது, Unnaadhu - உண்ணாமலும்
உறங்காது, Urankaadhu - உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை, Oli Kadalai - (திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து, Oodu Aruthu - இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற, Thaam Utra - (இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம், Pedhu Ellaam - பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது, Ennaadhu - மறந்து போய் (இப்போது)
தம்முடைய, Thammudaiya - தம்முடைய
நன்மைகளே, Nanmaikale - பெருமைகளையே
எண்ணுவர்,Ennuvar - எண்ணா நின்றார்