| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 614 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 8 | பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே | பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன்னொரு காலத்தில் பாசி தூர்த்து கிடந்த, Paasi Thoorthu Kidandha - பாசி படர்ந்து கிடந்த பார் மகட்டு, Paar Magattu - ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம், Maasu Udambil Neer Vaaraa Maanam Ila Panri Aam - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும் ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட தேசு உடைய தேவர், Dhesu Udaya Dhevar - தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய திரு அரங்கம் செல்வனார், Thiru Arangam Selvanaar - ஸ்ரீரங்கநாதன் பேசி இருப்பனகள், Pesi Irupanakal - (முன்பு) சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை பேர்க்கவும் பேரா, Perkkavum Pera - (நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை |