Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 614 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
614நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 8
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே
பண்டு ஒரு நாள், Pandu Oru Naal - முன்னொரு காலத்தில்
பாசி தூர்த்து கிடந்த, Paasi Thoorthu Kidandha - பாசி படர்ந்து கிடந்த
பார் மகட்டு, Paar Magattu - ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம், Maasu Udambil Neer Vaaraa Maanam Ila Panri Aam - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும் ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட
தேசு உடைய தேவர், Dhesu Udaya Dhevar - தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய
திரு அரங்கம் செல்வனார், Thiru Arangam Selvanaar - ஸ்ரீரங்கநாதன்
பேசி இருப்பனகள், Pesi Irupanakal - (முன்பு) சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை
பேர்க்கவும் பேரா, Perkkavum Pera - (நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை