| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 615 | நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 9 | கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே | கண்ணாலம் கோடித்து, Kannaalam Kodithu - கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து கன்னி தன்னை, Kanni Thannai - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை கை பிடிப்பான், Kai Pidipaan - பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக திண் ஆர்ந்து இருந்த, Thin Aarndhu Irundha - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த சிசுபாலன், Sisubalan - சிசுபாலனானவன் தேசு அழிந்து, Dhesu Azhinthu - அவமானப்பட்டு அண்ணாந்திருக்க ஆங்கு, Annandhirukka aangu - ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே அவளை, Avalai - அந்த ருக்மிணிப் பிராட்டியை கை பிடித்த, Kai Piditha - பாணி க்ரஹணம் செய்தருளினவனாய் பெண்ணாளன், Pennaalan - பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான் பேணும், Penum - விரும்பி எழுந்தருளி யிருக்கிற ஊர், Oor - திவ்ய தேசத்தினுடைய பேரும், Perum - திரு நாமமும் அரங்கம், Arangam - திருவரங்கமாம் |