Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 615 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
615நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 9
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
கண்ணாலம் கோடித்து, Kannaalam Kodithu - கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து
கன்னி தன்னை, Kanni Thannai - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை
கை பிடிப்பான், Kai Pidipaan - பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக
திண் ஆர்ந்து இருந்த, Thin Aarndhu Irundha - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன், Sisubalan - சிசுபாலனானவன்
தேசு அழிந்து, Dhesu Azhinthu - அவமானப்பட்டு
அண்ணாந்திருக்க ஆங்கு, Annandhirukka aangu - ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே
அவளை, Avalai - அந்த ருக்மிணிப் பிராட்டியை
கை பிடித்த, Kai Piditha - பாணி க்ரஹணம் செய்தருளினவனாய்
பெண்ணாளன், Pennaalan - பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான்
பேணும், Penum - விரும்பி எழுந்தருளி யிருக்கிற
ஊர், Oor - திவ்ய தேசத்தினுடைய
பேரும், Perum - திரு நாமமும்
அரங்கம், Arangam - திருவரங்கமாம்