Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 616 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
616நாச்சியார் திருமொழி || 11 - தாமுகக்கும் (தலைவி திருவரங்கன் செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திக் கூறுதல்) 10
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே
செம்மை உடைய, Semmai Udaya - (மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய
திரு அரங்கர், Thiru Arangar - ஸ்ரீரங்கநாதர்
தாம் பணித்த, Thaam Panitha - (முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த
மெய்ம்மை, meimai - ஸத்யமானதும்
பெரு, peru - பெருமை பொருந்தியதுமான
வார்த்தை, vaarthai - சரம ச்லோக ரூபமான வார்த்தையை
விட்டு சித்தர், Vittu Chithar - (என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர், Ketu Irupar - (குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல், Thammai Ukapaarai Thaam Ukapar Ennum Sol - “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே, tham Idaiye - தம்மிடத்திலேயே
பொய் ஆனால், poi aanal - பொய்யாய்ப் போய் விட்டால்
இனி, ini - அதற்கு மேல்
சாதிப்பார் ஆர், saadhipar aar - (அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை)