திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 617 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
617நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 1
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்
பதவுரை Show / Hide
மற்று இருந்தீர்கட்கு, Matru Irundirgatku - என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா, Ariyal Aaga - அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை, Madhavan Enbathu Or Anbu Thannai - மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு, Utrirundhenuku - அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம், Uraipathu Ellam - நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை, Oomaiyarodu Sevidar Vaarthai - ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண் (இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)
புறத்து, Purathu - ஸமீப ப்ரதேசத்திலே
என்னை, Ennai - என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய், Petrirunthalai Ozhiya poi - மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல், Perthu oru thai il - வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த, Valarndha - வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த, Mal Porundhaamal kalam adaindha - மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி, Nambi - கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை, Mathurai - மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின், Uythidumin - கொண்டு சேர்ந்து விடுங்கள்