Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 619 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
619நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 3
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்
தந்தையும், Thandhaiyum - தகப்பனாரும்
தாயும், Thaayum - தாய்மாரும்
உற்றாரும், Utraarum - மற்றுமுள்ள உறவினரும்
நிற்க, Nirka - இருக்கும் போது
தனி வழி, Thani vazhi - (இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள் என்கிற வார்த்தையானது
வந்த பின்னை, Vandha pinnai - உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது, Pazhikaapu aridhu - அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை ஏனென்றால்)
நந்த கோபாலன், Nandha Gopalan - நந்த கோபருடைய
கடைத் தலைக்கே, Kadai thalaikke - திரு மாளிகை வாசலிலே
மாயவன், Maayavan - ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து, Vandhu - எதிரே வந்து
உரு காட்டுகின்றான், Uru kaatukinraan - தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற, Kondhalam aaki parakazhithu kurumbu seivaan or maganai petra - (பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண், Nallirut kan - நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின், Ennai uythidumin - என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்