Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 622 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
622நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 6
கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்
கார், Kaar - வர்ஷா காலத்தி லுண்டான
தண், Than - குளிர்ந்த
முகிலும், Mukilum - மேகமும்
கருவிளையும், Karuvilaiyum - கருவிளைப் பூவும்
காயா மலரும், Kaayaa malarum - காயம் பூவும்
கமலம் பூவும், Kamalam poovum - தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு, Vanditu - எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன, Irudeekesan pakkal poku endru ennai eerthidukirana - “கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று என்னை வலிக்கின்றன (ஆகையாலே)
வேர்த்து, Verthu - பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து, Pasithu - பசியினால் வருந்தி
வயிறு அசைந்து, Vayiru asaindhu - வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று, Vendu adisil unnum podhu eethu endru - வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து, Parthirundhu - (ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும், Nedu nokku kollum - நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
பத்தவிலோசனத்து, Pathavilosanathu - பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
உய்த்திடுமின், Uythidumin - (என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்