| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 626 | நாச்சியார் திருமொழி || 12 - மற்று இருந்தீர்கட்கு (தலைவி கண்ணனுள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி உற்றாரை வேண்டுதல்) 10 | மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும் தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே | தாழ் குழலாள், Thaazh kuzhalaal - தாழ்ந்த கூந்தலை யுடையளாய் பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை, Pon iyalmaadam polindhu thondrum Pudhuvaiyaakon Vittu chithan kodhai - பொன் மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள் மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை, Mannu mathurai thodakkam aaga van Thuvarapathi than alavum thanai - ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும் (சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை) தமர், Thamar - தன் உறவினர் உய்த்து பெய்ய வேண்டி, Uythu peiya vendi - கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி துணிந்த துணிவை, Thunindha thunivai - கொண்ட அத்யவஸாயம் விஷயமாக இன் இசையால் சொன்ன, In isaiyaal sonna - இனிய இசையுடன் அருளிச் செய்த செம் சொல் மாலை, Sem sol maalai - அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை ஏத்த வல்லார்க்கு, Etha vallaarku - ஓத வல்லவர்களுக்கு இடம், Idam - வாழுமிடம் வைகுந்தம், Vaikundham - பரமபதமேயாம் |