Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 627 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
627நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி, Kaatchi - காட்சியிலே
பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள்