| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 627 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 1 | கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே | கண்ணன் என்னும், Kannan enum - ஸ்ரீக்ருஷ்ணனென்கிற கரு தெய்வம், Karu dheivam - கரியதொரு பரதேவதையினுடைய காட்சி, Kaatchi - காட்சியிலே பழகி கிடப்பேனே, Pazhagi kidapene - பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்) புறம் நின்று, Puram nindru - அசலாக இருந்து கொண்டு புண்ணில் புளி பெய்தால் போல, Punnil puli peidhal pol - புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல் அழகுபேசாதே, Azhagu pesadhe - பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து, பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில், Pennin varutham ariyaadha Perumaan araiyil - பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய பீதக வண்ணம் ஆடை கொண்டு, Peedhaga vannam aadai kondu - பீதாம்பரத்தைக் கொண்டுவந்து வாட்டம் தணிய, Vaatam thaniya - (என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி என்னை வீசீரே, Ennai veeseere - என்மேல் வீசுங்கள் |