| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 630 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 4 | ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும் காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே | ஆயர்பாடி, Aayarpaadi - திருவாய்ப்பாடி முழுவதையும் கவர்ந்து உண்ணும், Kavarnthu unnum - கொள்ளை கொண்டு அநுபவிக்கிற கார் ஏறு, Kaar yeru - ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் உழக்க, Uzhakka - ஹிம்ஸிக்க உழக்குண்டு, Uzhakkundu - (அதனால்) துன்பப்பட்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை, Thalarndhum murindhum kidapenai - பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை உலகத்து, Ulagathu - இவ் வுலகத்திலே ஆற்றுவர், Aatruvar - தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர் ஆரே, Aare - ஆருண்டு (யாருமில்லை) ஆரா அமுதம் அனையான் தன், Aara amutham anaiyaan than - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய அமுதம் வாயில், Amutham vaayil - அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே ஊறிய, ooriya - ஊறிக் கிடக்கிற நீர் தான், neer thaan - ரசத்தை யாவது புலராமே கொணர்ந்து, Pularaame konarndhu - உலராமல் பசையோடு கொண்டு வந்து பருக்கி, Parukki - அதை நான் பருகும்படி பண்ணி இளைப்பை நீக்கீரே, ilaippai neekeere - எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள் (என்கிறாள்) |