திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 631 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
631நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 5
அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால் தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே
பதவுரை Show / Hide
அழிலும் , Azhilum - அழுதாலும்
தொழிலும் , Thozhilum - தொழுதாலும்
உருக்காட்டான் , Urukatan - தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன், Anjel Ennaanavan - உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன் , Oruvan - ஒரு மஹாநுபாவன் (கண்ணன்)
புகுந்து , Pugundhu - இங்கே வந்து
என்னை தழுவி முழுசி , Ennai thazhuvi muzhusi - என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று , Sutri suzhandru - முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான், Pogaan - போகாமலிருக்கான்
ஆல்!, aal! - இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய் , Thazhayin pozhil vaai - பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே ,nirai pinne - பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால் , Nedu maal - வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற , Oodhi varuginra - ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய் , Kuzhalin thulaivai - புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு , Neer kondu - நீரைக் கொணர்ந்து
முகத்து, Mukathu - என்னுடைய முகத்திலே
குளிர தடவீர், kulira tadaveer - குளிர்த்தியாகத் தடவுங்கள்