| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 631 | நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 5 | அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால் தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே | அழிலும் , Azhilum - அழுதாலும் தொழிலும் , Thozhilum - தொழுதாலும் உருக்காட்டான் , Urukatan - தன் வடிவைக் காட்டாதவனாயும் அஞ்சேல் என்னானவன், Anjel Ennaanavan - உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள ஒருவன் , Oruvan - ஒரு மஹாநுபாவன் (கண்ணன்) புகுந்து , Pugundhu - இங்கே வந்து என்னை தழுவி முழுசி , Ennai thazhuvi muzhusi - என்னை நெருக்கி யணைத்து சுற்றி சுழன்று , Sutri suzhandru - முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து போகான், Pogaan - போகாமலிருக்கான் ஆல்!, aal! - இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம் தழையின் பொழில் வாய் , Thazhayin pozhil vaai - பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே நிரை பின்னே ,nirai pinne - பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே நெடு மால் , Nedu maal - வ்யாமுத்தனான கண்ண பிரான் ஊதி வருகின்ற , Oodhi varuginra - ஊதிக் கொண்டு வரப் பெற்ற குழலின் துளைவாய் , Kuzhalin thulaivai - புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற நீர் கொண்டு , Neer kondu - நீரைக் கொணர்ந்து முகத்து, Mukathu - என்னுடைய முகத்திலே குளிர தடவீர், kulira tadaveer - குளிர்த்தியாகத் தடவுங்கள் |