Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 632 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
632நாச்சியார் திருமொழி || 13 - கண்ணன் என்னும் (தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தணிக்க வேண்டுதல்) 6
நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே
நடை ஒன்று இல்லா உலகத்து , Nadai ondru illa ulagathu - (ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும் , Nandhagopan magan ennum - ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
கொடி ,Kodi - இரக்க மற்றவனாய்
கடிய , Kadiya - ஸ்வார்த்த பரனான
திருமாலால் , Thirumaalaal - ச்ரிய: பதியாலே (கண்ணனாலே)
நான் , Naan - அபலையான நான்
குளப்புக்கூறு கொளப்பட்டு , Kulapukkuru kolapattu - மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன் , Pudai peyaravum kilen - அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு)
போட்கன் , Potkan - சுணை கேடனான அக் கண்ண பிரான்
மிதித்த அடிப்பாட்டில் , Midhitha adipaatil - திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான் , Podi thaan - ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து , Konarndhu - கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள் , Poga uyir en udambai pooseergal - வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்