| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 637 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 1 | பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | ஓர் கார் ஏறு, Oor Kaar eru - (கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று பட்டி மேய்ந்து, Patti Meindhu - காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும் பல தேவற்கு, Pala Dhevarku - பல ராமனுக்கு ஓர் கீழ் கன்று ஆய், Oor Keezh Kanru Aay - ஒப்பற்ற தம்பியாய் இட்டீறிட்டு, Itteeritu - ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி விளையாடி, Vilaiyaadi - விளையாடிக் கொண்டு இங்கே போத, Inge Podha - இப்படி வர கண்டீரே, Kandire - பார்த்தீர்களோ? இட்டம் ஆன, Ittam Aana - (தனக்கு) இஷ்டமான பசுக்களை, Pasukalai - பசுக்களை இனிது, Inidhu - த்ருப்தியாக மறித்து, Marithu - மடக்கி மேயத்து நீர் ஊட்டி, Neer Ootti - தண்ணீர் குடிப்பித்து விட்டுக் கொண்டு, Vittu Kondu - (இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு விளையாட, Vilaiyaada - (அப் பெருமான்) விளையாட நிற்க விருந்தாவனத்தே, Virundhavanathe - ப்ருந்தாவனத்திலே கண்டோம், Kandom - ஸேவித்தோம் |