| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 639 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 3 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | மால் ஆய் பிறந்த நம்பியை, Maal aay Pirandha Nambiyai - பெண்கள் பக்கலுண்டான வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த தென்னலாம்படியான பெருமானாய் மாலே செய்யும் மணாளனை, Maale Seiyum Manalanai - வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய் ஏலா பொய்கள் உரைப்பானை, Eala poikal uraipanai - பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை இங்கே போதக் கண்டீரே?, Inge Podha Kandire? - இங்கே போதக் கண்டீரே? மேலால், Melaal - மேலே பரந்த, Parandha - பரவின வெயில், veyil - வெய்யிலை காப்பான், kapan - (திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை, Vinathai Siruvan Siragu Enum Melapinkeezh Varuvaanai - கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ் எழுந்தருளா நின்ற அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |