| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 640 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 4 | காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | கார், Kaar - காளமேகத்திலே தண், Than - குளிர்ந்த கமலம், Kamalam - தாமரை பூத்தாற் போன்றுள்ள கண் என்றும், Kan Endrum - திருக் கண்கள் என்கிற நெடு கயிறு, Nedu Kayiru - பெரிய பாசத்திலே என்னை படுத்தி, Ennai Paduthi - என்னை அசப்படுத்தி ஈர்த்துக் கொண்டு, Eerthu Kondu - (தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய் விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?, Vilaiyaadum Eesan Thannai Kandire? - விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே? போர்த்த முத்தின் குப்பாயம், Portha Muthin Kuppayam - போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய் புகர், Pugar - தேஜஸ்ஸை யுடையதாய் மால், Maal - பெரிதான யானை கன்று போல், Yaanai Kanru Pol - யானைக் குட்டி போலே வேர்த்து நின்று விளையாட, Verthu Nindru Vilaiyaada - வேர்வையுற்று நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |