| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 641 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 5 | மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே | மாதவன், Madhavan - ஸ்ரீய: பதியாய் என் மணியினை, En Maniyinai - எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய் வலையில் பிழைத்த பன்றி போல், Valaiyil Pizhaitha Panri Pol - வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று) ஏதும் ஒன்றும், Edhum Ondrum - (தன் பக்கலுள்ள) யாதொன்றையும் கொள தாரா, Kola Thaaraa - பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே?, Eesan Thannai Kandire? - ஈசன் தன்னை கண்டீரே? பீதகம் ஆடை, Peedhagam Aadai - திருப் பீதாம்பரமாகிற உடை, Udai - திருப் பரிவட்டமானது தாழ, Thaazha - தொங்கத் தொங்க விளங்க பெரு கார் மேகம் கன்று போல், Peru Kaar Megam Kanru Pol - பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே வீதி ஆர வருவானை, Veethi Aara Varuvaanai - திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை விருந்தாவனத்தே கண்டோம், Virundhavanathe Kandom - விருந்தாவனத்தே கண்டோம் |