Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 642 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
642நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 6
தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே
தருமம் அறியா, Tharumam Ariyaa - இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை, Kurumbanai - குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல், Than Kai Saarngam Athuve Pol - தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம், Puruva Vattam - திருப் புருவ வட்டங்களாலே
அழகிய, Azhagiya - அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை, Porutham Iliyai - (அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
கண்டீரே?, kandeere? - கண்டீரே?
உருது கரிது ஆய், Uruthu Karidhu Aay - திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய், Mukam Seidhu Aay - திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை, Udhayam Parupathathin Mel Viriyum Kathir Polvaanai - உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே