| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 643 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 7 | பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | பொருத்தம் உடைய நம்பியை, Porutham Udaya Nambiyai - பொருத்தமுடைய ஸ்வாமியாய் புறம் போல் உள்ளும் கரியானை, Puram Pol Ullum Kariyaanai - உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய் கருத்தை பிழைத்து நின்ற, Karuthai Pizhaithu Nindra - நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய் அக் கரு மா முகிலை, ak karu maa mukilai - கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?, Kandire? - கண்டீரே? அருத்தி, Aruthi - விரும்பப் பெறுகின்ற தாரா கணங்களால், Thaaraa Kanangalal - நக்ஷத்ர ஸமூஹங்களாலே ஆர பெருகு, Aara Perugu - மிகவும் நிறைந்திருந்துள்ள வானம் போல், vanam pol - ஆகாசம் போல் வானம் போல் விருத்தம் பெரிது ஆய், Virutham Peridhu Aay - பெருங்கூட்டமாய் வருவானை, varuvanai - எழுந்தருளா நின்ற அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |