| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 644 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 8 | வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே | வெளிய சங்கு ஒன்று உடையானை, Veliya Sangu Ondru Udaiyaanai - வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய் பீதகம் ஆடை உடையானை, Peethagam Aadai Udaiyaanai - பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய் நன்கு அளி உடைய, Nangu Ali Udaya - நன்றாகக் கிருபை யுடையவனாய் ஆழியானை, Aazhiyaanai - திருவாழியாழ்வானை யுடையவனாய் திருமாலை, Thirumaalai - ஸ்ரீய: பதியான கண்ணனை கண்டீரே?, kandeere? - கண்டீரே? களி வண்டு, Kali Vandu - (மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை எங்கும், engum - எப் புறத்திலும் கலந்தால், kalandhal - பரம்பினாற்போலே கமழ் பூங்குழல்கள், Kamazh Poonguzhalkal - பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை தடதோள்மேல், Thada thol mel - பெரிய திருத் தோள்களின் மேலே மிளிர நின்று விளையாட, Milira Nindru Vilaiyaada - (தாழ்ந்து) விளங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |