| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 645 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9 | நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே | நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை தந்த, thandha - உண்டாக்கின நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை கண்டீரே?, kandire? - கண்டீரே? தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும் களிறும், kalirum - குவலயாபீட யானையும் புள்ளும், pullum - பகாஸுரனும் உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே |