திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 645 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
645நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
பதவுரை Show / Hide
நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த, thandha - உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை
கண்டீரே?, kandire? - கண்டீரே?
தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும்
களிறும், kalirum - குவலயாபீட யானையும்
புள்ளும், pullum - பகாஸுரனும்
உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே