Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 645 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
645நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 9
நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
நாட்டை படை என்று, Natai Padai Endru - உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா, Ayan Mudhalaa - பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த, thandha - உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி, Nalir Maa malar Undhi Veetai Panni - குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும், vilaiyaadum - இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை, Vimalan Thannai - பரம பாவனனான பெருமானை
கண்டீரே?, kandire? - கண்டீரே?
தேனுகனும், Thenukanum - தேநுகாஸுரனும்
களிறும், kalirum - குவலயாபீட யானையும்
புள்ளும், pullum - பகாஸுரனும்
உடன் மடிய, udan madiya - உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை, kaatai naadi vettai aadi varuvaanai - காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை
விருந்தாவனத்தே கண்டோமே, Virundhavanathe Kandome - விருந்தாவனத்தே கண்டோமே