| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 646 | நாச்சியார் திருமொழி || 14 - பட்டி மேய்ந்தோர் (விருந்தாவனத்தே பரமனைக் கண்டமை கூறுதல்) 10 | பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல் விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே | பரு தாள் களிற்றுக்கு, Paru Thaal Kalitruku - பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்த, Arul Seidha - க்ருபை பண்ணின பரமன் தன்னை, Paraman thannai - திருமாலை பாரின் மேல், paarin mel - இந் நிலத்திலே விருந்தாவனத்தே கண்டமை, Virundaavanathe Kandamai - ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி விட்டு சித்தன் கோதை சொல், Vittu Chithan Kodhai sol - பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை மருந்து ஆம் என்று, Marundhu aam endru - (பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு தம் மனத்தே, tham Manathe - தங்கள் சிந்தையிலே வைத்துக் கொண்டு வாழ்வார்கள், Vaithu kondu Vaazhvaarkal - அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள் பெரு தாள் உடைய பிரான் அடி கீழ், Peru Thaal Udaya Piran Adi Keezh - பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே என்றும், Endrum - எந்நாளும் பிரியாது இருப்பார், Piriyadhu Iruppar - பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள் |