திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 7 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
7திருப்பல்லாண்டு || ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –அவதாரிகை --ஏடு நிலத்திலே இவராலே ஆஹூதரான கைவல்யார்த்திகள் தங்கள் ஸ்வபாவத்தை சொல்லிக் கொண்டு வர -அவர்களோடே சங்கதர் ஆகிறார் -இவர்களை அழைத்த போது -வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ -என்று நீங்கள் பற்றின புருஷார்த்தத்தை விட்டு வாரும் கோள் என்றும் -நமோ நாராயணாய -என்று -அநந்ய ப்ரயோஜனராய் வாரும் கோள் என்றும் – நாடும் நகரும் நன்கறிய -என்று விசேஷஜ்ஞர் பரிகிரஹிக்கும் படியாகவும் -அவிசேஷஜ்ஞர் உபேஷிக்கும் படியாகவும் வாரும் கோள் என்று இ றே அவர்களை அழைத்தது – அதில் -ஷூத்ர புருஷார்த்தத்தை விடுகையும் -அநந்ய பிரயோஜனர் ஆகையும் -நம்முடைய க்ர்த்யம் அனுகூலர் பரிகிரஹிக்கையும் ப்ரதிகூலர் கை விடுகையும் செய்ய வடுப்பது என் என்று பார்த்து வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே -த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து -அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் – 7
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
பதவுரை Show / Hide
தீயில், Theeyil - அக்னி/ஸூரியன் முதலிய பொருள்களைக் காட்டிலும்
பொலிகின்ற, Polikindra - மிகவும் விளங்குகிற
செம்சுடர், Semsudar - சிவந்த ஒளியை உடையவனாய்
ஆழி, Aazhi - வட்டமாக
திகழ், Thigazh - பிரகாசிக்கிற
திருச் சக்கரத்தின் கோயில், Thiru Chakkarathin Koyil - ஸ்ரீஸுதர்சநாழ்வானுடைய இருப்பிடத்
தின்

பொறியாலே, Poriyale - சிந்தத்தாலே
ஒற்றுண்டு நின்று, Ottrundu Nindru - அடையாளம் செய்யப்பட்டவராய் நின்று
குடிகுடி, Kudikudi - தலைமுறை தலைமுறையாக
ஆட்செய்கின்றோம், Aatcheikinrom - அடிமை செய்வதற்காக வந்தோம்
மாயப் பொரு படை, Maaya Poru Padai - வஞ்சனையாகப் போர் செய்யும் ஸேனையை உடைய
வாணனை, Vaananai - பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும், Ayiram Tholum - ஆயிரம் தோள்களிலிருந்தும்
பொழி குருதி பாய, Pozhi Kuruthi Paaya - பொழியாநின்றுள்ள ரத்த வெள்ளம் பாயும்படியாக
சுழற்றிய, Suzhatriya - சுழற்றப்பெற்ற
ஆழி, Aazhi - திருவாழி யாழ்வானை
வல்லானுக்கு, Vallaanukku - ஏந்தி நிற்க வல்லவனுக்கு
பல்லாண்டு கூறுதுமே, Pallaandu Koordhume - திருப்பல்லாண்டு பாடுகிறோம்