திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 756 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
756ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 5
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய் ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய் அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே
பதவுரை Show / Hide
நின்று, Ninru - ஸ்தாவரமாயும்
இயங்கும், Iyankum - ஜங்கமமாயுமிருக்கிற
ஒன்று அலா ருக்கள் தோறும், Onru Ala Rukkal Thorum - பலவகையான சரீரங்கள் தோறும்
ஆவி ஆய், Aavi Aay - ஆத்மாவாய்
ஒன்றி, Onri - பொருந்தி
உள் கலந்து நின்ற, Ul Kalandu Ninra - பரிஸமாப்ய வர்த்தியாநின்ற
நின்ன, Ninna - உன்னுடைய
தன்மை, Thanmai - ஸ்வபாவம்
இன்னது என்று, Innadhu Endru - இத்தகையதென்று
என்றும், Endrum - எக்காலத்திலும்
யார்க்கும், Yaarkkum - எப்படிப்பட்ட ஞானிகட்கும்
எண் இறந்த, En Irandha - சிந்திக்க முடியாதிருக்கிற
ஆதியாய், Aadhiyai - ஆதிகாரணபூதனனான எனம்பெருமானே! (நீ)
அன்று, Andru - முற்காலத்திலே
நின் உந்திவாய், Nin Undivai - உனது திருநாபியில்
நான் முகன், Naan Mughan - சதுர்முகப்ரஹ்மாவை
பயந்த, Payandha - படைத்த
ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - முழு முதற் கடவுளல்லையோர்.