திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 761 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 10 | தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே | பதவுரை Show / Hideதன்னுள்ளே திரைத்து, Thannulle Thiraithu - தன்னிலே கிளர்ந்து எழும், Ezhum - பரவுகின்ற தரங்கம், Tharangam - அலைகளையுடைத்தாய் வெண்தடம், Venthadam - வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான கடல், Kadal - கடலானது தன்னுள்ளே திரைத்து எழுந்து, Thannulle Thiraithu Ezunthu - தனக்குள்ளே கிளர்துலாவி அடங்குகின்ற தன்மைபோல், Adanginru Thanmaipol - (மறுபடியும்) சாந்தமாவதுபோல. நிற்பவும், Nirbavum - ஸ்தாவரஜங்கமரூபமான ப்ரபஞ்சமெல்லாம் நின்னுள்ளே, Ninnulle - உன் ஸ்வரூபத்துக்குள்ளே பிறந்து, Pirandhu - உத்பந்தமாய் இறந்து, Irandhu - லாபமடைந்து நின்னுள்ளே அடக்குகின்ற நீர்மை, Ninnulle Adakkinru Neermai - (இப்படி) உன் ஸ்வரூபத்துக்குள்ளேயே ஒடுங்கிப்பொருகைக்கு உரிய தன்மை நின் கண்ணே நின்றது, Nin Kannae Nindrathu - உன் பக்கலில் தான் உள்ளது. |