திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 763 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
763ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 12
உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல் உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே
பதவுரை Show / Hide
உலகு தன்னை, Ulaku Thannai - லோகங்களை
நீ படைத்தி, Nee Padaiththi - நீ ஸ்ருஷ்டியாகின்றாய்;
உள் ஒடுக்கி வைத்தி, Ul Odduki Vaiththi - (நித்யஸநமித்திகாதி ப்ரளயாபத்துக்களிலே அவ்வுலகங்களைத்) திருவயிற்றினுள்ளே ஒடுங்கவைத்து நீயே நோக்கா நின்றாய்.
மீண்டு, Meendu - அதுமன்றியில்
உலகு தன்னே, Ulaku Thanne - இவ்வுலகத்தினுள்ளே
பிறத்தி, Piraththi - வந்து அவதரியா நின்றாய்;
ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையை என்று நிர்ணயிக்க முடியாதவனாயிரா நின்றாய்;
உலகு, Ulaku - ப்ரபஞ்சம் முழுதும்
நின்னொடு ஒன்றி நிற்க, Ninnodu Onri Nirka - (சரீரியான) உன்னோடு (சரீரமாய்) அணைந்து நிற்க
வேறு நிற்றி, Veeru Nittir - அஸாதாரண விக்ரஹகத்தோடு கூடி வ்யாவ்ருத்தனாயிரா நின்றாய்;
உலகில், Ulagil - லோகத்திலே
குழல் உள்ள நின்னை, Kuzhal Ulla Ninnai - ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர், Yaavalar Ulla Vallar - அறியவல்லாரார்?