திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 771 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
771ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 20
கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர் பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும் பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே
பதவுரை Show / Hide
முன், Mun - அநாதிகாலமாக.
வேலைநீர், Velaineer - ஸமுத்ரஜலத்திலே
கூசம் ஒன்றும் இன்றி, Koosam Ondrum Inri - சிறிதும் கூசாதே
மாசுணம், Masunam - திருவனந்தாழ்வானை
படுத்து, Paduthu - படுக்கையாக விரித்து
பேச நின்று தேவர் வந்து பாடக் கிடந்ததும், Pesa Nindru Thevar Vandu Paadak Kidandhadum - ஸ்தோத்தரம் பண்ணுவதற்கென்று அமைந்த ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து பாடும்படி சமநித்தருளினபடியையும்
அன்று, Andru - தேவர்களுக்காகக் கடல் கடைந்த அக்காலத்தில்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா (என்று) ஏச நீ கிடந்த ஆறும், Paasam Nindra Neeril Vaalum Aamaiana Keshavaa Enru Aesa Nee Kidandha Aarum - “வருண பாசங்கள் கிடக்கிற கடலிலேவாழ்கின்ற ஆமையென்னும் க்ஷுத்ர ஜந்துவாகப் பிறந்த கேசவனே!” என்று (அவிவேகிகள்) ஏசும்படி கிடந்தபடியையும்
தேற, Theera - அடியேன் நன்குதெரிந்து கொள்ளும்படி
கூறு, Kooru - (எனக்கு) அருளிச் செய்யவேணும்.