திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 773 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 22 | பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே | பதவுரை Show / Hideபண்டும் இன்றும் மேலும் ஆய், Pandhum Indrum Maelum Aayi - மூன்று காலங்களிலும் கைவிடாதே நின்று ரக்ஷித்தருளுமவனாகையாலே ஞானம் எழும், Gnanam Ezhum - உலகங்களையெல்லாம் மண்டி உண்டு, Mandi Undu - (ப்ரளய வெள்ளம் கொள்ளாதபடி) விரும்பி அமுது செய்து ஓய் பாலன் ஆகி, Oy Palan Aagi - ஒப்பற்ற சிறு குழந்தையாய் ஆலிலை துயின்ற, Aalilai Thuyindra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின ஆதிதேவனே !, Aadithevaney - மூல புருஷனே! வண்டு, Vandu - வண்டுகளானவை கிண்டு, Kintu - (மதுவுக்காக வந்து) குடையும்படியான தண்துழாய் அலங்கலாய், Thanthuzhai Alanghalai - குளிர்ந்ததிருத்துழாய் மாலையை அணிந்தவனே! சீர் கலந்த புண்டரீக பாவை சேரும்மார்ப!, Seer Kalanda Pundareeka Paavai Serummaarpa - அழகு சேர்ந்த தாமரை மலரிற்பிறந்த பெரிய பிராட்டியார் வந்து புணரும்படியான திருமார்பையுடையவனே! பூமி நாதனே!, Bhoomi Naadhane - பூமிப்பிராட்டிக்கு நாதனே! (என்று ஈடுபடுகிறார்.) |