திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 774 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
774ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 23
வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊனிறத் துகிர்த் தல மழுத்தினாய் உலாய சீர் நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி பால் நிறக் கடல் கிடந்த பத்ம நாபன் அல்லையே
பதவுரை Show / Hide
வால் திறந்து, Vaal Thirandhu - வெளுத்த நிறத்தையுடைய
ஓர் சீயம் ஆய், Oru Seeyam Aayi - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன், Valainda Vaal Vayittrinann - வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து, Oon Nirathu - சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய், Uthir Thalam Azhuthinai - கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர், Ulaaya Seer - உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
கால் நிறத்த வேதம், Kaal Niraththa Vedham - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர், Naavar - நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால், Nalla Yothinaal - விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு, Vanangu - வணங்குவதற்கு இடமான
பால்நிறக் கடல், Paalnirak Kadal - திருப்பாற் கடலிலே
கிடந்த, Kidandha - பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே, Parpanarapan Allaiye - பத்மநாபன் நீயேயன்றோ