திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 776 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
776ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 25
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய் இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே
பதவுரை Show / Hide
வரத்தினில், Varathinil - (பிரமன் கொடுத்த) வரத்திலே
சிரத்தை மிக்க, Sirathai Mikka - அதிகமான நம்பிக்கையுடையவனாய்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள் போன்ற (பயங்கராமன) கோரப்பற்களையுடையவனான
மற்றவன், Mattravan - ஆச்ரித சத்ருவான இரணியனுடைய
உரத்தினில், Urathinil - மார்விலே
கரத்தை வைத்து, Karathai Vaiththu - திருக்கைகளை வைத்து
உகிர்த்தலத்தை, Ukirthalathai - நகரங்களை
ஊன்றினாய், Oondrinai - அழுத்திக் கொன்றாய்;
நீ, Ni - இப்படிப்பட்ட நீ
இரத்தி, Irathi - (ஒரு ஸயம் மாவலியிடத்தே சென்று) யாசிக்கிறாய்;
இது என்ன பொய், Idhu Enna Poi - இது என்ன இந்திரஜாலம்!
இரந்த மண், Iranda Mann - யாசித்துப்பெற்ற உலகத்தை
வயிற்றுளே கரத்தி, Vayittrule Karathi - (ஒரு கால்) திருவயிற்றுக்குள்ளே ஒளித்து வைக்கிறாய்;
உன் கருத்தை, Un Karuththai - (இப்படியெல்லாம், செய்கிற) உன்னுடைய கருத்தை
யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார்கண்டறிவல்லார்! (யாருமில்லை.)