திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 779 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
779ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 28
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப் படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
பதவுரை Show / Hide
பௌவம் நீர், Pauvam Neer - (அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து
படைத்த, Padaitha - (பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார், Paar - பூமியை
இடந்து, Idandhu - (ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து, Alandhu - (த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு, Undu - (ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து, Umizhndhu - (ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர், Pauvam Neer - (இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து, Adaiththu - ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து, Mun Athil Kidandhu - முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த, Kadaindha - (ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!, Petri Poy - (இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த, Midaiththu - செருக்கி வந்த
மாலி, Maali - மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி, Vilangu Maan Maali - அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக, Kaalan Oor Puga - யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த, Padaikalam Vidutha - ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!, Pal Padai Thadakai Maayane - பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)