திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 782 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 31 | கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே | பதவுரை Show / Hideகாலநேமி காலனே!, Kaalanemi Kaalane - காலநேமியென்னும் அஸுரனதுக்கு யமனானவனே! கணக்கு இலாத கீர்த்தியாய், Kanakku Ilaadha Keerthiyaai - எண்ணிறந்த புகழையுடையவனே! பண்டு, Pandhu - முன்பொருகால் (ப்ரளய காலத்திலே) ஞாலம் எழும் உண்டு, Njaalam Ezhum Undu - ஏழுலகங்களையும் அமுது செய்து பாட்டு, Paatu - மின்னறதெயிற்றரக்கன் வீழ ஓர் பாலன் ஆய, Oru Palaan Aaya - ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த பண்பனே!, Panbanne - ஆச்சர்யபூதனே வேலைவேவ, Velaiveva - கடல்நீர் வெந்து போம்படி வில்வளைத்த, Vilvalaittha - வில்லை வளைத்த. வெல் சினத்த வீர!, Vel Sinaththa Veera - எதிரிகளை வென்றேவிடும்படியான சீற்றத்தையுடைய வீரனே! நின்பாலர் ஆய பக்தர் சித்தம், Ninpaalar Aaya Bhakthar Siththam - உன்பக்கல் அன்பு பூண்டவர்களின் சித்தத்தின்படி முத்தி செய்யும், Muththi Seyyum - (அவர்கட்கு) மோக்ஷம் தந்தருள்கிற மூர்த்தியே!, Moorththiye - ஸ்வாமியே! |