திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 785 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 34 | ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே | பதவுரை Show / Hideஆதி ஆதி ஆதி நீ, Aadhi Aadhi Aadhi Nee - மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்: ஒரு அண்டம் ஆதி, Oru Andam Aadhi - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்; ஆதலால், Aadhalal - இப்படியிருக்கையாலே சோதியாத சோதி நீ, Sodhiyadha Sothi Nee - பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்; அது உண்மையில், Adhu Unmaiyil - அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே விளங்கினாய், Vilanginai - (வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்; வேதம் ஆகி, Vedham Aagi - வேதங்கட்கு நிர்வாஹகனாய் வேள்வி ஆகி, Velvi Aagi - யஜ்ஞ்களாலே ஆராத்யனாய் விண்ணினோடு மண்ணும் ஆய், Vinninodu Mannum Aay - உபய விபூதிக்கும் நியாமகனாய் ஆதி ஆகி, Aadhi Aagi - இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த ஆயன் ஆய மாயம், Aayan Aaya Maayam - இடையனாய்ப் பிறந்தாமயம் என்ன மாயம், Enna Maayam - என்ன ஆச்சரியமோதான். |