திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 788 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 37 | காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா | பதவுரை Show / Hideகாய்ந்த, Kaayndha - காய்கள் நிறைந்ததும் நீள், Neel - உயர்த்தியையுடையதுமான விளங்கனி, Vilangani - (அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை உதிர்த்து, Uthirthu - உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று) எதிர்த்த பூ குருந்தம், Edhirtha Poo Kuruntham - எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து சாய்த்து, Saaythu - முடித்து மா பிளந்த, Maa Pilantha - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்த கைத் தலத்த, Kaid Thalaththa - திருக்கைகளையுடைய கண்ணன் என்பர், Kannan Enbar - கண்ணன் என்று (உன்னை அறிவுடையார்) சொல்லுவார்கள். ஆய்ச்சி பாலை, Aaychchi Paalai - யசோதைப் பிராட்டியினுடைய முலைப்பாலை உண்டு, Undu - அமுது செய்து வெண்ணெய் உண்டு, Vennaiy Undu - நவநீதத்தை அமுத செய்து பேய்ச்சிபாலை உண்டு, Peychchipaalai Undu - பூசதனையினுடைய முலைப்பாலை உண்டு பின், Pin - கல்ப்பத்தின் முடிவில் மண்ணை, Mannai - பூமியை உண்டு, Undu - திருவயிற்றிலே வைத்து பண்டு, Pandhu - கல்பத்தின் ஆதியிலே ஓர் ஏனம் ஆய, Oor Aenam Aaya - ஒப்பற்ற வராஹருபியாய் அவதரித்த வாமனா, Vaamana - வாமந மூர்த்தியே! |