திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 790 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
790ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 39
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும் வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே
பதவுரை Show / Hide
வெற்பு எடுத்து, Verpu Eduthu - மந்தர பர்வதத்தைக்கொண்டு
வேலை நீர், Velai Neer - கடல் நீரை
கலக்கினாய், Kalakkinaai - கலங்கச் செய்தாய்
அது அன்றியும், Adhu Anriyum - அதுவு மல்லாமல்
வெற்பு எடுத்து, Verpu Eduthu - மலைகளைக்கொண்டு
வேலை நீர், Velai Neer - (தெற்குக்) கடலிலே
வரம்பு கட்டி, Varambu Katti - திருவணையைக்கட்டி
வேலைசூழ், Velaisool - கடலாலே (அகழாகச்) சூழப்பட்டதாயும்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ், Verpu Edutha Inji Soozh - மலையான மதினாலே சூழப்பட்டதாயுமுள்ள
இலங்கை, Ilankai - லங்கையினுடைய
கட்டு, Kattu - அரணை
அழித்த, Azitha - அழியச் செய்த
நீ, Ni - தேவரீர்
வெற்பு எடுத்து, Verpu Eduthu - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்து
மாரி காத்த, Maari Kaatha - மழையைத் தடுத்த
மேகம் வண்ணன் அல்லையே, Megam Vannan Allaiye - காளமேக நிபச்யாமரன்றோ!