திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 792 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 41 | ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே | பதவுரை Show / Hideமாய !, Maaya - ஆச்சரியபூதனே. (நீ) அயன் ஆகி, Ayan Aagi - இடப்பிள்ளையாய்ப் பிறந்து ஆயர் மங்கை, Aayar Mangai - இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய வேய தோள், Veya Thol - வேய்போன்ற தோள்களை அம்பரத்தோடு இம்பராய், Ambaraththodu Imbarai - மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில் யாவர், Yaavar - யார்தான் நின்னை ஆயவல்லர், Ninnai Aayavallar - உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.) மாயம் மாயை கொல்!, Maayam Maayai Kol - (இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.) அது அன்றி, Adhu Andri - அது அப்படியிருக்கட்டும்; நீ, Ni - ஸர்வசக்தனான நீ வகுத்தலும், Vaguththalum - (உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும். மாய, Maaya - (சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக மாயம் ஆக்கினாய், Maayam Aakkinai - (இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; உன் மாயம் முற்றும், Un Maayam Muttrum - உன்னுடைய ஸங்கல்பமெல்லாம் மாயமே, Maayame - ஆச்சரியமாயிருக்கின்றன. |