திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 794 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
794ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 43
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய் அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே
பதவுரை Show / Hide
வெம்சினந்த, Vemsinanth - உக்ரமான கோபத்தையுடைய
வேழம், Vezham - குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு, Ven Maruppu - வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து, Osiththu - ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த, Uruththa - கோபிஷ்டனாயும்
மா, Maa - பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை, Kanjanai - கம்ஸனை
கடிந்து, Kadinthu - வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி, Vanjanaththu Vanda Paeychchi Aavi - வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய், Paalun Vaanginai - முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!, Man Alandhu Konda Kaalane - (த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய, Anjanandha Vannaan Aaya - மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே, Aadhithevan Allaiye - ஆதிபுருஷனன்றோ?