திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 798 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 47 | காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே | பதவுரை Show / Hideகாரொடு ஒத்த மேனி, Kaarodu Oththa Meni - காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய் நங்கள் கண்ண, Nangal Kanna - எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே! விண்ணின் நாதனே, Vinnin Nadane - நித்யஸூரிகட்குத் தலைவனே! நீர் இடத்து, Neer Idathu - (நீதி) திருப்பாற்கடலிலே அரா அணை, Ara Anai - திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே கிடத்தி, Kidathi - பள்ளிகொண்டருளா நின்றாய் என்பர், Enbar - என்று (ஞானிகள்) சொல்லுவார்கள் அன்றியும், Anriyum - அது தவிரவும் (நீ) ஓர் இடத்தை அல்லை, Oru Idaththai Allai - ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை. எல்லை இல்லை, Ellai Illai - (நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை. என்பர், Enbar - என்றும் சொல்லுவார்கள் ஆதலால், Aadhalal - இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே காயினேன், Kaayinen - மிகவும் நீசனாகிய அடியேன். சேர்வு இடத்தை தெரிந்து, Servu Idathai Therinthu - ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு இறைஞ்சும் ஆ, Iraichum Aa - ஆச்ரயிக்கலாம்படியை சொல், Sol - அருளிச் செய்யவேணும். |