| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 8 | திருப்பல்லாண்டு || 8 | நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே | நெய் இடை, Nei Idai - நெய்யின் நடுவிலிருக்கும் நல்லது ஓர் சோறும், Nalladhu Or Sorum - பாவசுத்தியுடன் இடப்பட்டதாய்(ஒப்பற்ற சுவையை உடையதான ப்ரஸாதத்தையும்) நியதமும், Niyadhamum - எப்போதும் அத்தாணிச் சேவகமும், Athaanich Sevakamum - பிரிவில்லாத ஸேவையையும் கை, Kai - (எம்பெருமான் தன்) திருக்கையாலே இட்ட அடைக்காயும், Adaikkaayum - வெற்றிலைப் பாக்கையும் கழுத்துக்குப் பூணொடு, Kazhuthukkup Poonodu - கழுத்துக்கு ஆபரணமான குண்டலத்தையும் காதுக்குக் குண்டலமும், Kaadhukkuk Kundalamum - காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும் மெய்யிட, Meyyida - உடம்பிலே பூசத்தக்க நல்லது ஓர் சாந்தமும், Nalladhu Or Saanthamum - பரிமளம் நிறைந்த ஒப்பற்ற சந்தனமும் தந்து, Thandhu - கொடுத்து என்னை, Ennai - (மிகவும் நிஹீனனான) என்னை வெள் உயிர் ஆக்கவல்ல, Vel Uyir Aakkavalla - சுத்த ஸ்வபாவனாக ஆக்கவல்ல பை உடை, Pai Udai - படங்களை உடைய நாகம், Naagam - ஸர்ப்பத்துக்கு பகை, Pagai - விரோதியான கருடனை கொடியானுக்கு, Kodiyaanukku - கொடியாக உடையவனுக்கு பல்லாண்டு கூறுவன், Pallaandu Kooruvan - மங்களாசாஸனம் பண்ணக்கடவேன் |