திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 804 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
804ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 53
மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால் பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே
பதவுரை Show / Hide
மோடியோடு, Modiyodu - காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான், Ilachchai Aaya Saapam Eydhi Mukkanan - வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு, Makkalodu - ஸ்வஜனங்களோடு
கூடு, Koodu - திரண்ட
சேனை, Senai - ஸேனையை
கொண்டு, Kondhu - அழைத்துக்கொண்டு
வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட, Mandi Oda - வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன், Vaanan - பாணாஸுரனது
ஆயிரம் கரம், Aayiram Karam - ஆயிரம் கைகளை
கழித்த, Kazhitha - அறித்தொழித்த
ஆதி மால், Aadhi Maal - பரமபுருஷனுடைய
பீடுகோயில், Peedukoyil - பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு, Neer Koodu - காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது, Arangam Endra Podhu - திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்