திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 804 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 53 | மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே | பதவுரை Show / Hideமோடியோடு, Modiyodu - காளியும் இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான், Ilachchai Aaya Saapam Eydhi Mukkanan - வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் மக்களோடு, Makkalodu - ஸ்வஜனங்களோடு கூடு, Koodu - திரண்ட சேனை, Senai - ஸேனையை கொண்டு, Kondhu - அழைத்துக்கொண்டு வெம் சமத்து, Vem Samathu - பயங்கரமான போர்க்களத்திலிருந்து மண்டி ஓட, Mandi Oda - வேகமாக ஓடிப்போன வளவிலே வாணன், Vaanan - பாணாஸுரனது ஆயிரம் கரம், Aayiram Karam - ஆயிரம் கைகளை கழித்த, Kazhitha - அறித்தொழித்த ஆதி மால், Aadhi Maal - பரமபுருஷனுடைய பீடுகோயில், Peedukoyil - பெருமைதங்கிய கோயில் நீர் கூடு, Neer Koodu - காவேரியோடு கூடின அரங்கம் என்றபோது, Arangam Endra Podhu - திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம் |