திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 805 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 54 | இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே | பதவுரை Show / Hideஇலை தலை, Ilai Thalai - இலைபோன்ற நுனியையுடைய சரம், Saram - அம்புகளை துரந்து, Durandhu - பிரயோகித்து இலங்கை, Ilankai - எல்லையினுடைய கட்டு, Kattu - அரண்களை அழித்தவன், Azhiththavan - அழியச்செய்த இராமபிரான்; மலைத்தலை, Malai Thalai - (ஸஹ்யமென்னும்) மலையிலே பிறந்து, Pirandhu - பிறந்து இழிந்து, Izhindhu - அங்கு நின்றும் ப்ரவஹித்து வந்து, Vandhu - நெடுக ஓடிவந்து சந்தனம், Sandhanam - சந்தன மரங்களை நுந்து, Nundhu - (போர்த்துத்) தள்ளாநின்றதாயும், குலைத்து, Kulaittu - (குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி அலைத்து, Alaiththu - அலசி இறுத்து, Iruththu - முறிக்க எறிந்த, Erindha - (அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின குங்குமம் குழம்பினோடு, Kungumam Kuzhambinodu - குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட அலைத்து ஒழுகு காவிரி, Alaiththu Ozhugu Kaaviri - அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய அரங்கம், Arangam - கோயிலிலே மேய, Meya - எழுந்தருளியிருக்கிற அண்ணன், Annan - ஸ்வாமியாவர். |