திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 806 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 55 | மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே | பதவுரை Show / Hideமா மலர் மன்னு கிழத்தி, Maa Malar Mannu Kizhaththi - சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும் வையம் மங்கை, Vaiyam Mangai - ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும் மைந்தன் ஆய், Maindhan Aayi - (விரும்பத்தக்க) யுவாவாய், பின்னும், Pinnum - மேலும் ஆயர் பின்னை, Aayar Pinnai - (கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள், Thol - தோளோடே மணம் புணர்ந்து, Manam Punarndhu - ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்) அது அன்றியும், Adhu Anriyum - அதுக்கு மேலும் உன்ன பாதம், Unna Paatham - உன்னுடைய திருவடிகளை என்ன சிந்தை, Enna Sindhai - என்னுடைய நெஞ்சினுள்ளே மன்னை வைத்து, Mannai Vaiththu - பொருந்தவைத்து கல்கினாய், Kalginai - அருள்செய்த பெருமானே! பொன்னி சூழ் அரங்கம் மேய, Ponni Soozh Arangam Meya - (நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ. |