திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 808 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
808ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 57
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான் கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பதவுரை Show / Hide
சங்கு தங்கு முன் கை நங்கை, Sangu Thangu Mun Kai Nangai - (நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை, Kongai - திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன், Thangal Utravan - விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம், Angam - சரீரமானது
மங்க, Manga - மாளவேணுமென்று
அன்று சென்று, Andru Senru - முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து, Adarnthu - அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த, Erindha - (அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான், Azhiyan - கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல், Konju Thanguvar Kuzhal - நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார், Madandaiyar - திவ்யஸுந்தரிகள்
குடந்தை, Kudanthai - அவகாஹிக்கப்பெற்ற
நீர், Neer - தீர்த்தமானது
பொங்கு, Pongu - வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள், Than Kudanthaiyul - குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த, Kidandha - பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன், Pundareekan - ஸுந்தராங்கன்.